/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி
/
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி
ADDED : ஜூன் 24, 2011 03:27 PM

* கடவுளிடம் நம்பிக்கை வைத்து அவருக்கு மட்டுமே பயந்து நடந்தால் எவருக்கும் நாம் பயப்பட வேண்டியதில்லை.
* எவ்வளவு பயங்கரமான இம்சையையும் எதிர்த்து நிற்பதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆயுதம் அகிம்சையைத் தவிர வேறெதுவும் இல்லை.
* உண்மையான அன்பை வெறும் வாய்ப்புகழ்ச்சியின் மூலமாக மட்டும் காட்டிவிட முடியாது. செயலின் மூலமே காட்ட முடியும்.
* ஆடம்பரமும், சுதந்திரமும் ஒன்று இல்லை. நம்முடைய நிதி நிலவரத்திற்கு ஏற்றபடி தான் வாழ்க்கை நடத்த வேண்டும்.
* உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் மனவளமும் அதிகரிக்கிறது.
* ஆனந்தம் என்பது போராட்டத்தில் தான் இருக்கிறது. போராட்டத்தின் விளைச்சல் ஆண்டவன் அருளைப் பொறுத்து கிடைக்கும்.
* இறைவனின் திருவடியை அடைந்தவர்களை நினைத்து அதிகமாகத் துக்கப்படக்கூடாது; ஏனெனில், இறந்தவரின் ஆத்மா என்றுமே அழியாமல் இருந்து வருகிறது.
* நாக்கிற்கு இனிமை தரும் பொருள்களை விரும்புவதை விட, மனதிற்கு இனிமை தரும் பொருள்களை விரும்புங்கள்.
* 'நம்மைவிட இவர் தாழ்ந்தவர்' என்று யாரைப்பற்றியும் நாம் நினைக்கக்கூடாது. அவ்வாறு நினைப்பவர்கள் தீயவர்களாகக் கருதப்படுவர். இந்த குணத்தை ஒழிக்காவிட்டால் அவ்வாறு நினைப்பவர்களை இந்த எண்ணமே தின்றுவிடும்.
* மாணவர்களின் மூளையைக் கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் இதயங்களை ஆசிரியர்கள் பக்குவப்படுத்த வேண்டும். ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் குறிப்பிடும் எந்த வார்த்தையையும் மாணவர்களின் அகராதியிலிருந்து துடைத்தெறிந்து விட ஆசிரியர்கள் உதவி புரிய வேண்டும்.
* எண்ணம் என்பது மகத்தானதாகவும், புதுமையானதாகவும் இருந்தால் அதன் விளைவும் மகத்தானதாக இருக்கும்.
* கெட்ட காற்று வெளியேற வேண்டுமானால், நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற வேண்டுமானால் நல்ல எண்ணங்கள் உட்புக வேண்டும்.
* பிறரை பயமுறுத்தி நம்முடன் ஒத்துழைக்கும்படிச் செய்ய முடியாது, அவ்வாறு செய்தால் நாம் பலரது அனுதாபத்தையும். ஆதரவையும் இழந்துவிடுவோம். எனவே அன்புடன் அனைவருடனும் ஒத்துழைக்க வேண்டும்.
* நம்முடைய கலாச்சாரத்தில் எது சிறப்பானதோ அதைப் பேணி வைத்துக் கொள்ளவும், எது கீழ்த்தரமாகவும், கேடுள்ளதாகவும் விளங்குகிறதோ அதைச் சிறிதும் தயக்கமின்றியும் புறக்கணித்துவிட வேண்டும்.
* அறிவையும் பொறுமையும் தக்க சமயத்தில் உபயோகித்தால் எவராலும் தகர்க்கவே முடியாத சக்தி வந்து சேரும்.
* நீண்ட காலமாக உடம்போடு உடம்பாக ஊறிவந்திருக்கும் சமுதாயக் கேடுகளை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது, அதற்கு நிதானமும் தளரா முயற்சியும் தேவை.
* சீர்திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் குறிக்கோள் நிறைவேற வேண்டுமானால், உணர்ச்சிவசப்படுவதையும், கோபப்பட்டு குதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

