sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தினமும் திருமணம் செய்யும் பெருமாள்

/

தினமும் திருமணம் செய்யும் பெருமாள்

தினமும் திருமணம் செய்யும் பெருமாள்

தினமும் திருமணம் செய்யும் பெருமாள்


ADDED : செப் 16, 2016 09:31 AM

Google News

ADDED : செப் 16, 2016 09:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாமல்லபுரம் சாலையில் கோவளத்தை அடுத்து அமைந்திருப்பது திருவிடந்தை. காலவ மகரிஷி தன் மகள்கள் 360 பேரையும் மணம் முடிக்க பெருமாளே வர வேண்டும் என்று தவம் இருந்தார். அவரின் தவத்தை ஏற்று பெருமாள், யாத்திரை செல்பவர் போல் வந்தார். அப்பெண்கள் அனைவரையும் ஒரே உருவமாக்கினார். அவளை தனது இடப்பாகத்தில் ஏற்றுக் கொண்டார். வராக மூர்த்தியாகப் பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். திருமகளாகிய அப்பெண்ணை தன் இடப்பாகத்தில் வைத்த படியால் திரு+இட+ எந்தை என்பது திருவிடவெந்தை என்றாயிற்று. காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆகி விட்டது. இங்கு பெருமாள் நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். ஒரு ஆண்டிலுள்ள 365 நாட்களில் 360 நாட்கள் ஒவ்வொரு பெண்ணாக கல்யாணம் செய்து கொள்ளும் இவர், ஐந்து நாட்கள் பிற சடங்குகளுக்காக ஒதுக்கிக் கொள்கிறார். இங்கு பெருமாளின் ஒரு திருவடி பூமியிலும், மற்றொரு திருவடி ஆதிசேஷன் மீதும் உள்ளது. அகிலவல்லித் தாயாரை மடியில் தாங்கியிருக்கிறார்.






      Dinamalar
      Follow us