sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வளர்த்தவர்களை போற்றும் நாள்

/

வளர்த்தவர்களை போற்றும் நாள்

வளர்த்தவர்களை போற்றும் நாள்

வளர்த்தவர்களை போற்றும் நாள்


ADDED : டிச 09, 2016 09:00 AM

Google News

ADDED : டிச 09, 2016 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 பெற்றவள் ஒருத்தி, வளர்த்தவள் ஒருத்தி என பல குழந்தைகள் பூமியில் இருக்கிறார்கள். தாயில்லாத அனாதை குழந்தைகள், சந்தர்ப்ப சூழலால் தாயைப் பிரிந்தவர்கள் வேறொரு தாயின் பராமரிப்பில் வளர்வது வழக்கம். கண்ணன் தேவகிக்குப் பிறந்தாலும் யசோதையிடம் வளர்ந்தார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த முருகன், கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தார். எனவே அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுப்பதற்காக, அவர்களைப் போற்றும் விதத்தில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்தார். திருக்கார்த்திகைத் திருநாளில் சிவாலயங்களில் தீபம் ஏற்றுவது போல, முருகன் குடிகொண்ட மலைகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது. தன்னை வளர்த்த ஆறுபெண்களையும் ஒரே நட்சத்திரமாக இணைத்து வானமண்டலத்தில் இடம் பெற அருளினார். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வார் என்பதால் அந்நாளில் மாதம் தோறும் விரதம் இருக்கின்றனர்.

முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகத்தில் கூட மாதம்தோறும் விரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்றே முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us