sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முப்பெரும் தீர்த்தம்

/

முப்பெரும் தீர்த்தம்

முப்பெரும் தீர்த்தம்

முப்பெரும் தீர்த்தம்


ADDED : ஆக 27, 2012 09:57 AM

Google News

ADDED : ஆக 27, 2012 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாமனர் யாசகம் பெற்ற போது, அதை தாரை வார்த்து கொடுப்பதற்காக மகாபலியின் மனைவி விந்தியாவளி கிண்டியில் (கெண்டி) இருந்து தீர்த்தம் வழங்கினாள். அந்த தீர்த்தம் கையில் பட்டதும் வாமனர் திரிவிக்ரமராக மாறி உலகத்தை அளக்கத் தொடங்கினார். அவரது திருவடி பிரம்மாவின் உலகமான சத்தியலோகத்தை அடைந்தது. திருவடியைக் கண்ட பிரம்மா, தன்னுடைய கமண்டல தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பாதபூஜை செய்தார். பின், அந்த திருவடி, அண்டத்தைச் சென்றடைந்தது. அண்டத்தைச் சுற்றி 'ஆவரணஜலம்' என்ற தீர்த்தம் உண்டு. அதுவும் வழியத்தொடங்கியது. கையில் வாங்கிய கிண்டித்தீர்த்தம், பிரம்மாவின் அபிஷேக தீர்த்தம், ஆவரண தீர்த்தம் மூன்றும் சேர்ந்து நேர்கோட்டில் விழுந்தது. இதில் பிரம்மாவின் அபிஷேக தீர்த்தமே மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர்கோவில்) நூபுர கங்கையாகக் கொட்டுவதாக ஐதீகம்.






      Dinamalar
      Follow us