ADDED : ஜன 06, 2017 10:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏதாவது எழுதும் முன்பாக 'உ' என பிள்ளையார் சுழி போடுகிறோம். இதற்கு காரணம் தெரியுமா?
'ஓம்' என்பதை, 'அ, உ, ம்' என்று பிரிக்க வேண்டும். அதாவது, அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் 'ஓம்' என்று வரும். 'அ' என்பது படைப்பதையும், 'உ' என்பது காப்பதையும், 'ம்' என்பது அழிப்பதையும் குறிக்கும்.
'அ' என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. 'உ' என்பது உயிரெழுத்துகளில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும். மேலும், 'உ' என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. இறையருளுடன் நம் செயல்கள் தடையின்றி நடக்கவே 'உ' என எழுதுகிறோம்.

