sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சூரியனுக்கு பொங்க நைவேத்யம் ஏன்?

/

சூரியனுக்கு பொங்க நைவேத்யம் ஏன்?

சூரியனுக்கு பொங்க நைவேத்யம் ஏன்?

சூரியனுக்கு பொங்க நைவேத்யம் ஏன்?


ADDED : ஜன 13, 2017 10:39 AM

Google News

ADDED : ஜன 13, 2017 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மென்மையான பொங்கலை சூரியனுக்கு நைவேத்யம் செய்கிறோம். இது குறித்த புராணத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. பார்வதியின் தந்தையான தட்சன், சிவனை அழைக்காமல் ஒரு யாகம் செய்தான். சூரியன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் யாகத்திற்கு வந்தனர். இதையறிந்த பார்வதிதேவி, மருமகனை அழைக்காமல் யாகம் நடத்தியது பற்றி தந்தையை தட்டிக் கேட்டாள். தட்சனோ சிவனை நிந்தித்து பேசினான். இதைக் கேட்டு சூரியன் கலகலவென சிரிக்க, விஷயம் சிவனைச் சென்றடைந்தது. சிவன் கோபத்தால் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி தேவர்களைத் தண்டித்தார்.

சூரியனிடம் வீரபத்திரர், “நீ தானே பல் தெரிய சிரித்தவன்” என்று சொல்லி ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பற்கள் நொறுங்கி விழுந்தன. இதனடிப்படையில் காஞ்சிப்பெரியவர், “சூரியனைப் பல் இல்லாத கிரகம் என்றும், பொங்கலன்று அவருக்கு வழுக்கை தேங்காய் படைக்க வேண்டும்' என்றும் குறிப்பிடுவார். இதற்காகவே அப்படியே விழுங்கும் சர்க்கரைப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.






      Dinamalar
      Follow us