
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகத்தைப் படைத்து ஒழுங்கான கதியில் நடத்திச் செல்லும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே கடவுள் என்கிறோம்.
* மனதில் தோன்றியதை எல்லாம் பேசித் திரியக்கூடாது. தேவையான சமயத்தில் தான் பேச வேண்டும். அதுவும் அளவாகவே இருப்பது அவசியம்.
* அன்பினால் பிறருடைய குறைகளைத் திருத்துவதே சிறந்தது. அதுவே நிலைத்த பலனைக் கொடுக்கும்.
* கோபத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது. மனம், உடல் இரண்டுமே கோபத்தால் பாதிப்படைகின்றன.
- காஞ்சிப்பெரியவர்