ADDED : மார் 20, 2016 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.
* பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக் கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் ஏற்படும்.
* ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுளை வழிபட்டதற்கான நன்மை கிடைத்தே தீரும்.
-காஞ்சிப்பெரியவர்