ADDED : மார் 27, 2023 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல ஒழுக்கங்கள் தவறுகளைத் தண்ணீராக கரைத்து விடுகின்றன.
* தீய ஒழுக்கங்கள் மனிதனின் நற்கூலிகளைக் கெடுத்து விடுகின்றன.
* சிறந்த ஒழுக்கத்திற்கு சொந்தக்காரரே இறைவனுக்கு நெருக்கமானவர்.
* மனிதர்களுக்கு தரப்பட்ட சிறந்த பொருள் ஒழுக்கம்.
* நல்லொழுக்கமும், நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டியது வரும்.
* மறுமையின் மீது நம்பிக்கை கொண்டவர் நல்லதையே பேச வேண்டும். இல்லையேல் மவுனமாக இருக்கலாம்.
* நேரத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றி உறுதி.
* இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. அவை உடல் நலம், ஓய்வு நேரம் ஆகும்.
-பொன்மொழிகள்

