* செல்வ வளம் என்பது அதிக செல்வம் பெறுவது அல்ல. போதும் என்ற மனதுடன் வாழ்வதே.
* யூகம், அனுமானம், வதந்தி, அடிப்படையற்ற விஷயங்களில் இருந்து விலகுங்கள்.
* மரணமடைந்தவரை குறை சொல்லாதீர். அவர்கள் செயலுக்கான பலனை அடைந்து விட்டனர்.
* நெருப்பு விறகை விழுங்கி விடுவது போல் பொறாமை நன்மைகளை விழுங்கி விடும்.
* பிறருடைய கால்நடைகளின் பாலை அனுமதி பெறாமல் கறக்க வேண்டாம்.
* கையால் உழைத்து உண்பதும், பொய் பேசாமல் வாணிபம் நடத்துவதும் நற்பண்புகள்.
* உண்ணுங்கள். பருகுங்கள் ஆனால் விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
* பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டுப் பெறுவது நல்லதல்ல.
* தண்ணீர் இல்லாத இடத்தில் குடிநீர் தருபவன் வாழ்வு அளித்தவன் ஆவான்.
* திருமணம் செய்து கொண்டால் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்ததாக பொருள்.
* பெண்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.
- பொன்மொழிகள்

