'பேஸ்புக்'கில் டாக்டராக நடித்து பெண்களை சீரழித்தவன் கைது : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
Added : பிப் 04, 2015 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

குரோம்பேட்டை: 'பேஸ்புக்' போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.போலீசில் புகார்குரோம்பேட்டையில் பிரபல வழக்கறிஞர் ஒருவர், தன் வீட்டில் இருந்த, 10 சவரன் நகைகளை, மர்மநபர்கள் திருடியதாக போலீசில் புகார் அளித்தார். விசார ணையில், வழக்கறிஞரின்மகள், 'பேஸ்புக்'கில் பழகிய ரகமத்துல்லா, 27, என்பவனிடம் நகைகளை இழந்ததாக தெரியவந்தது. போலீசார், அவனது 'பேஸ்புக்' கணக்கை சோதனையிட்டனர். அதில், ரகமத்துல்லா, தான் ஒரு டாக்டர் என போலியான தகவல்களை அளித்தது தெரியவந்தது. அவனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவனது, 'பேஸ்புக்' கணக்கை தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்ததில், அவனுடன் வேறொரு பெண், தொடர்பில் இருந்தது தெரிந்தது. போலீசார் அந்த பெண்ணின் உதவியுடன், ரகமத்துல்லாவை கைது செய்தனர். விசாரணையில், அவன் விழுப்புரம் மாவட்டம், கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்த, அசன் அலி என்பவரின் மகன், என்பது தெரியவந்தது.'பேஸ்புக்' கணக்கில் அவன் தன்னை டாக்டர் என, அறிமுகம் செய்துகொண்டு, பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது. சிறையில் அடைப்புரகமத்துல்லாவிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவனை கைதுசெய்து, குரோம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
குண்டுத்தமிழன் - Chennai,இந்தியா
04-பிப்-201514:29:16 IST Report Abuse
குண்டுத்தமிழன் நன்கு முன்னேறிய பெண்கள் ஏன் இப்படி பஹட்டு பொய்களை நம்பி சிரலிஹின்றனர்.... இது மாதிரி பிராடுத்தனம் பண்ணுற கலுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X