திருநெல்வேலி:பிரதமர் மோடி நெல்லை மாணவியுடன் வீடியோ நேரலையில் பேசும் நிகழ்ச்சிக்கு தடல்புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருநெல்வேலியை சேர்ந்த மாணவி விசாலினி 15. சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு ஆன்லைன் தேர்வுகளை எழுதி சாதனை படைத்துள்ளார். கம்ப்யூட்டர் துறையில் நெட்வொர்க்கிங் பிரிவில் அபார திறமையோடு விளங்குகிறார். நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்பு சென்றுவந்தவர், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பல்கலையில் நேரடியாக எம்.டெக்.,முதலாம் ஆண்டில் சேர அனுமதியளிக்கப்பட்டுள்ளார். சிறுவயதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை இன்று 4ம் தேதி டில்லியில் இருந்தபடி பிரதமர் மோடி நேரலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி பாராட்டுகிறார். ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜயநாராயணத்தில் இயங்கும் மத்திய கேந்திர வித்யாலா பள்ளி மாணவிகள் இந்த நிகழ்ச்சிகள் உடன் இருக்கிறார்கள். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 11 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு நிறைவு பெறும்.இதில் விசாலினியுடன் பிரதமர் பேசும்போது எப்படி பேசவேண்டும் என்பவை நேற்று விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ ஆகிய மத்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு குழுவினர் நெல்லை வந்துள்ளனர்.பிரதமருடன் நேரலை முடியும் வரையிலும் பத்திரிகை, டிவிக்கு பேட்டி கொடுக்க கூடாது என விசாலினிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் நெல்லை கலெக்டர் கருணாகரனும் உடன் இருக்கிறார். 2 மணிநேர நேரலை நிகழ்ச்சிக்காக ஒரு சினிமா ஷூட்டிங் போல ஒத்திகை நிகழ்ச்சிகளால்நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பரபரப்பு தாற்றிக்கொண்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.