டிச.14க்குள் கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவு
Updated : டிச 08, 2016 | Added : டிச 08, 2016 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை, மதுரை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை சீமைக் கருவேல மரங்களை அகற்ற
மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மேயர் பட்டுராஜன் (அ.தி.மு.க.,),'சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதன் வேர்கள் 175 அடி ஆழம் வரை ஊடுருவுகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்திருந்தார்.நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு விசாரித்தது. மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்துாரி ஆஜரானார்.

மாநகராட்சி வழக்கறிஞர்: ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரையில் பூங்காக்கள், மைதானங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்
உள்ளதால், அகற்ற அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிலத்திலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான திட்டம் உள்ளது.
மனுதாரர்: மதுரை நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரை இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
நீதிபதிகள்: முதற்கட்டமாக மதுரை நீதிமன்றத்திலிருந்து உயர்
நீதிமன்றம் வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, மாநகராட்சி கமிஷனர் டிச.,14 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

மேயராக இருந்தபோது
என்ன செய்தீர்கள்
இவ்வழக்கு விசாரணையின்போது மனுதாரரை நோக்கி குறுக்கிட்ட நீதிபதி ஏ.செல்வம்,
'நீங்கள் மேயராக இருந்தபோது, நான் மதுரை சட்டக் கல்லுாரியில் படித்தேன். அப்போது சீமைக் கருவேல மரங்களை அகற்ற என்ன
செய்தீர்கள்?,' என கேள்வி எழுப்பினார்.
பட்டுராஜன், “அப்போது சீமைக் கருவேல மரங்கள் இல்லை. சிறிய கன்றுகளாக
இருந்தன,” என்றார்.
நீதிபதி ஏ.செல்வம், “சிறிய கன்றுகளாக
இருந்தபோதே அகற்றியிருந்தால், இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்காதே!,” என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X