அரசு கட்டடம் ஆக்கிரமிப்பில் இருந்தாலும் தூள் தூள்! மாநகராட்சி துணை கமிஷனர் அதிரடியாக அறிவிப்பு
Added : நவ 18, 2017 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
அரசு கட்டடம் ஆக்கிரமிப்பில் இருந்தாலும் தூள் தூள்! மாநகராட்சி துணை கமிஷனர் அதிரடியாக அறிவிப்பு

சமீபத்திய மழை பாதிப்புகளை தொடர்ந்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வேகம் பிடித்துள்ள நிலையில், கூவத்தில், நேற்றும், 387 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த பணிகளை ஆய்வு செய்ய வந்த, மாநகராட்சி துணை கமிஷனர், கோவிந்தராவ், 'நீர்நிலை ஆக்கிரமிப்பில், அரசு கட்டடமே இருந்தாலும் அகற்றப்படும்' என, அதிரடியாகஅறிவித்திருப்பது, சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கூவம் நதி மறு சீரமைப்பு பணிகளை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி, இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று, அரும்பாக்கம் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 387 வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள், அதிரடியாக இடித்து தள்ளினர். இதில், 231 குடும்பங்களை, படப்பை அடுத்த, நாவலுாரிலும், 156 குடும்பங்களை,திருவொற்றியூரிலும் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்கள், தங்களது உடைமைகளை எடுத்துச் செல்ல, மாநகராட்சியே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மறு குடியமர்வு செல்வோருக்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை புதிய முகவரிக்கு மாற்றிக் கொடுக்கவும், குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கவும், மாநகராட்சியே முன்னின்று உதவி செய்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த, மாநகராட்சி துணை கமிஷனர், மந்திர் கோவிந்தராவ், ஆக்கிரமிப்பாளர்களிடம், குறைகளை கேட்டறிந்தார். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என, உறுதியளித்தார்.

அப்போது துணை கமிஷனர், கோவிந்தராவ் அளித்த பேட்டி: கூவத்தை மேம்படுத்தும் திட்டத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கூவத்தில், மொத்தம், 14 ஆயிரத்து, 285 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில், 1,199 ஆக்கிரமிப்புகள், இதுவரை இடிக்கப்பட்டு, அந்த குடும்பங்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளன. அரும்பாக்கம், முத்துமாரியம்மன் நகர் ஆக்கிரமிப்பாளர்கள், தற்போது மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர்.

நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும். அரசு அலுவலக கட்டடம், ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தாலும், பாரபட்சமின்றி அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அமைந்தகரை அருகே கூவத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் கட்டப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, துணை கமிஷனர் இவ்வாறு கூறினார்.

சென்னையை பொறுத்த வரையில், கூவம், அடையாறு ஆகிய ஆறுகளிலும், மற்ற நீர்வழித்தடங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி தான் செய்ய வேண்டும்.அடையாற்றிலும், கூவத்திலும், வீடுகள்மட்டுமின்றி, தொழிற்சாலைகள், அலுவலககட்டடங்களும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதுவரை உள்ளூர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு, ஆக்கிரமிப்பாளர்கள் தப்பி வந்தனர்.ஆனால், சமீபத்திய மழை பாதிப்புகளுக்கு பின், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில், தமிழக அரசு உறுதியாக செயல்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்.,அதிகாரி, அமுதா தலைமை யிலான அதிகாரிகள் குழு, அங்குள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை நொறுக்கி வருகிறது.சென்னையிலும் அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் மத்தி யில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-நவ-201710:33:13 IST Report Abuse
Srinivasan Kannaiya பரவா இல்லையே... ரொம்ப துணிச்சலா பேசுகிறாரே... செய்து முடிக்கிறாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...
Rate this:
Cancel
christ - chennai,இந்தியா
18-நவ-201712:38:54 IST Report Abuse
christ ஆக்கிரமிப்புகார்களுக்கு மின்வசதி ,சாலைவசதி, ரேஷன் கார்டுகள் ,ஆதார்கார்டுகள் போன்றவைகள் வழங்காமல் இருந்தாலே ஆக்கிரமிப்பு தடுக்கப்படும் .ஆனால் அரசின் பிறதுறைகளோ பணத்தை வாங்கிக்கொண்டு சில வசதிகளை செய்து கொடுத்துவிடுகின்றனர்
Rate this:
vadivelu - chennai,இந்தியா
19-நவ-201701:40:59 IST Report Abuse
vadiveluஎல்லாம் இந்த பெரியார் தேசத்தில் புரை யோடி போய் இருக்கிறது....
Rate this:
Cancel
twodotzero - Singapore,சிங்கப்பூர்
18-நவ-201712:32:45 IST Report Abuse
twodotzero பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X