பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏ.டி.எம்., வசதி செய்துதர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர்உசேன், சென்னை இந்திய வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் ஏ.டி.எம்., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,ற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகரித்து வரும் தங்கள் வங்கி சேமிப்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக ஏ.டி.எம்., வசதி செய்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.