பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், பவுர்ணமியை முன்னிட்டு, உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம், பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்தது. 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.