பேரையூர்:பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.
பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் சேதமடைந்துள்ளது. ஓடுகள் பெயர்ந்து விழுகின்றன. கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயத்தில் உள்ளது.பழுதான வகுப்பறை கட்டடங்கள் மூடப்பட்டு அருகில் உள்ள கட்டடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். பழுதான கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.