சின்னசேலம், ஜூன் 19-
வி.பி.அகரம் கிராமத்தில் பெண்ணைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த வி.பி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சின்னதங்கம், 40; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமு, 33; மனைவி சத்யா என்பவருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.கடந்த மாதம் 24ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராமு மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் கட்டையால் தாக்கியதில் சின்னதங்கத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்த புகாரில் இருவர் மீது வழக்குப்பதிந்த சின்னசேலம் போலீசார் ராமுவை 33, கைது செய்தனர்.