சிங்கப்பெருமாள்கோவில் - காட்டாங்குளத்துார் இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், இன்றும், நாளையும், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
* சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக, மீண்டும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் வட்ட பாதை ரயில், இன்றும், நாளையும், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்
* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 9:32 மணி, மற்றும் 10:56 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 10:08 மணி மற்றும் 11:48 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்lசெங்கல்பட்டில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:30 மணிக்கு இயக்க வேண்டிய ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், கூடுவாஞ்சேரி - கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் இயக்கப்படும்
*செங்கல்பட்டில் இருந்து, கடற்கரைக்கு, காலை, 11:30 மணி மற்றும் மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி வரை இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரி - கடற்கரை இடையே மட்டும் இயக்கப்படும்
*செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:55 மணி, மற்றும் நண்பகல், 12:20 மணிக்கு இயக்க வேண்டிய ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளன
* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, இரவு, 8:01 மணி, மற்றும் 9:18 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், வரும், 18ம் தேதி வரை, சிங்கப்பெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்
*செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, இரவு, 10:15 மணி, மற்றும் இரவு, 11:10 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், வரும், 18ம் தேதி வரை, செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் - கடற்கரை நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.