கோவை:கோவை, நஞ்சுண்டாபுரம், கிழக்கு தேவேந்திரன் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம், 58. இவரது மகன் ராஜா, 37; பெயின்டர். நேற்று முன்தினம் இருவர் இடையே, குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா இரும்பு கம்பியால், தந்தையை தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.அலறல் சப்தம் கேட்டு, அருகே இருந்தவர்கள் மாணிக்கத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணிக்கத்தின் மகள் கல்பனா அளித்த புகாரின்பேரில், போத்தனுார் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.