பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 51, விவசாயி. இவரது வீட்டில் இன்று(டிச.,6) குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த அவரது மகன் சாமியப்பன், 35, தந்தையை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மகனை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது