கடலுார்:புதுச்சேரியில் நடந்த இறகுபந்து போட்டியில் கடலுார் இறகுபந்து அகாடமி பிரிவு மாணவ, மாணவியர் பெற்றி பெற்றனர்.
புதுச்சேரியில் குருவாலயா விளையாட்டு பயிற்சி மையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு இறகுப்பந்து போட்டி நடந்தது. புதுச்சேரி மற்றும் தமிழக மாநிலங்களுக்குகிடையேயான இப்போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கடலுார் பிரிவு இறகு பந்து அகாடமியில் பயிற்சி பெறும் 7 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். 11 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் மாணவியர் நிதர்ஷினி, மடோனா முதலிடமும், 11 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி மடோனா 2ம் இடமும், 11 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் மாணவர்கள் வேல்முருகன், திணேஷ் அரவிந்த் இரண்டாமிடமும் பிடித்தனர்.15 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் மாணவியர் நித்யஸ்ரீ, ரட்சன்யா முதலிடமும் பிடித்தனர். இவர்களை, மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா பாராட்டினார். பயிற்சியாளர் சுரேந்தர் உடனிருந்தார்.