விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 101 பேர் இறந்தனர். 520 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 12 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது. இதுவரை குணமடைந்த 12 ஆயிரத்து 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 102 ஆனது.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,753 ஆக உயர்ந்தது. இதில், 9,336 பேர் குணமடைந்துள்ளனர். 99 பேர் இறந்தனர். மீதமுள்ள 318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.