விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரங்கராஜன், அனந்தராஜன் தலைமையிலான போலீசார் கலிஞ்சிகுப்பம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டிகள் மற்றும் மாருதி ஆம்னி காரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.இதையடுத்து, போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டு வண்டிகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.