செஞ்சி: சொத்து தகராறில் தந்தையை பீர்பாட்டிலால் தாக்கிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கெடார் அருகே உள்ள அதனுார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் 60; விவசாயி; இவருக்கும் இவரது மகன் செல்வம் 35; என்பவருக்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு செல்வம், தந்தை கோவிந்தனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி, மிரட்டினார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிந்து செல்வத்தை தேடி வருகின்றனர்.