பாலக்காடு : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு மாவட்டம், அத்திக்கோட்டை சேர்ந்தவர் முகமது ராபி, 36. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த, ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கொழிஞ்சாம்பாறை போலீசார், 'போக்சோ' சட்டத்தில், ராபியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாலக்காடு சிறையில் அடைத்தனர்.