காரைக்கால் : மாடு மீது பைக் மோதியதில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,41; தச்சர். இவரது உறவினருக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடன், அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மைத்துனர் உமாசங்கர் இருவரும், பைக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
பிள்ளைத்தெருவாசல் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியது.அதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் உமாசங்கர் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலசுப்ரமணியன் இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.