கடலுார் : நெய்வேலி என்.எல்.சி., அதிகாரி, பைக் மோதி இறந்தார்.கடலுார், ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர், 57; நெய்வேலி என்.எல்.சி.,யில் உதவி நிர்வாக அதிகாரியான இவர், பைக்கில் புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகில் வந்த போது, எதிரில் வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார். புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.