சிவகாசி:சிவகாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.
தாலுகா அலுவலகம் சர்வேயர் பிரிவில் நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் துணை ஆய்வுக் குழு அலுவலர் பொன்ராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கருப்பையா,
இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா குழுவினர் சோதனை செய்தனர். இப்பிரிவில் பணிபுரியும் அலுவலர்களின் டூ வீலர்களில் பணம் உள்ளதா என தேடினர். இதில் ஒரு அலுவலரின்
டூ வீலரில் பணம் இருப்பது கண்டறியப்பட்டு எடுக்கப்பட்டது.9:00 மணிக்கு பின்னரும்
இச்சோதனை தொடர்ந்தது. அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.