கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. நேற்று, மாவட்டத்தில், 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்த, 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 4,717 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,424 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 47 பேர் தொற்றால் இறந்து உள்ளனர். தற்போது, 246 பேர் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.