கோவை : கோவையில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது, கொசுவர்த்தி தீ பிடித்து பரிதாபமாக இறந்தார்.
சாய்பாபாகாலனி, புது நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அம்சவேணி,82; இரவில் துாங்குவதற்கு முன், கொசுவர்த்தியை பற்ற வைத்து அருகில் வைத்துள்ளார். அயர்ந்து துாங்கி கொண்டிருந்த போது, கொசுவத்தி மீது, பெட்ஷீட் விழுந்து தீ பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.