அவிநாசி:மதுபோதையில், மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெரியகானுாரை சேர்ந்த, 40 வயது நபருக்கு, மனைவி மற்றும் 16 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். மதுபோதையில் அவர், மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், மனைவி கோபித்து, தாய் வீடு சென்றார். இந்நிலையில், மகளுடன் தவறாக நடக்க முயன்றார். சிறுமியின் தாய், அவிநாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின்படி, போலீசார் அந்நபரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.