ஆண்டிபட்டி : பாலக்கோம்பையைச்சேர்ந்தவர் பழனியாண்டவர் 22. தேனி தனியார் மில்லில் வேலை செய்கிறார். அங்கு பணி செய்த பெரியகுளம் பங்களாபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சில நாட்களுக்கு முன் கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சிறுமியை மீட்ட ஆண்டிபட்டி மகளிர் போலீசார் , பழனியாண்டவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.