சேலம்: தமிழக, கேரளா மலைப்பிரதேசங்களில் பெய்த மழையால், ஏலக்காய் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டு, மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்ததால், அதன் விலை, கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்தது.
கேரளா, அதை ஒட்டிய தமிழகத்தின் தேனி உள்பட மலைப்பிரதேச மாவட்டங்களில், சில நாளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஏலக்காய் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டு, தமிழக மார்க்கெட்டுக்கு, அதன் வரத்து சரிந்தது. குறிப்பாக, தமிழகத்தின் விருதுநகர், சேலம் லீபஜார், சென்னை மார்க்கெட்டுகளுக்கு, கடந்த வாரம் வரை, வாரம், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த ஏலக்காய், தற்போது, 50 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை, நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, ஏலக்காய் முதல் ரகம் கிலோ, 2,300க்கு விற்றது, 2,450 ரூபாய், இரண்டாம் ரகம், 2,100க்கு விற்றது, 2,250 ரூபாய், மூன்றாம் ரகம், 1,800க்கு விற்றது, 1,950 ரூபாயாக உயர்ந்தது.