கடலுார் : கடலுார்மாவட்டத்தில், நேற்று 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 156 பேர். நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 21பேர் குணமடைந்ததால், இது வரை 23 ஆயிரத்து 812 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தொற்று பாதித்த 69பேர் சிகிச்சை பெறுகின்றனர். 501 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.இதுவரை 275 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.