ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட 7,158 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.மாவட்டத்தில், தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று புதிதாக, ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 7,357 ஆனது. நேற்று நான்கு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 7,158 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 41 ஆக உள்ளது.