கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 643 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 657 ஆக உயர்ந்தது. இதில், 10 ஆயிரத்து 476 பேர் குணமடைந்துள்ளனர். 106 பேர் இறந்தனர். மீதமுள்ள 75 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.