கடலுார் : ஓய்வு பெற்ற விடுதி வார்டன் வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா தேசிங்கு, 60; ஓய்வு பெற்ற விடுதி வார்டன். இவர், பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு கடந்த 11ம் தேதி குடும்பத்துடன் சென்று, கடந்த 22ம் தேதி வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 சவரன் நகைகள், 10,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கடலுார் முதுநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.