ஓசூர்: ஓசூர் அருகே, புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அடுத்த பொம்மசந்திராவை சேர்ந்தவர் ரவி; இவரது மகள் லட்சுமி, 21; இவருக்கும், ஓசூர் சாந்தபுரத்தை சேர்ந்த எல்லப்பா என்பவருக்கும், கடந்த, 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்குள் கருத்து வேறுபாடால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி, கடந்த, 22ல் மாலை விஷம் குடித்தார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, லட்சுமியின் தாய் நாகமணி, 38, கொடுத்த புகாரின்படி, ஓசூர் டி.எஸ்.பி., முரளி வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமான, 11 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.