ப.வேலூர்: மின்சாரம் தாக்கி, மின்வாரிய பணியாளர் பலியானார். ப.வேலூர் தாலுகா, கந்தம்பாளையத்தில் கடந்த, 27 இரவு, 10:00 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், நல்லூர் துணை மின் நிலைய கம்பத்தில் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. காளியப்பனூரை சேர்ந்த காளியண்ணன், 45, சித்தாளந்தூரில் உள்ள மின் நிலைய அலுவலகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மின்கம்பியாளராக பணியாற்றி வந்தார். இவர் அன்று இரவு, 11:30 மணிக்கு மின்கம்பத்தில் டெஸ்ட்ராடு மாற்றி, சரி செய்யும் பொழுது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.