மப்பேடு; மப்பேடு அருகே, இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,இளம் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே, சுங்குவார்சத்திரம் சாலையில் புதுப்பட்டு கிராமம் செல்லும் வழியில், நாகராஜ், 37, கடந்த, 24ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, அவரது மனைவி சத்யதேவி மற்றும் ராஜாவின் நண்பர்களான அஜீத், மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.விசாரணையில், சத்யதேவி, 26, என்பவரை, கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய ராஜா, அஜீத் உட்பட மூவரையும், மப்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.