கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 669 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 669ல், 10 ஆயிரத்து 515 பேர் குணமடைந்துள்ளனர். 107 பேர் இறந்தனர். மீதமுள்ள 47 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.