கோவை:கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 145 பேர், நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சுகாதார துறை நேற்று வெளியிட்ட பட்டியலில், மாவட்டத்தில் புதிதாக, 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு 48 ஆயிரத்து 866 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 613 ஆக உள்ளது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது. தற்போது, 935 பேர் சிகிச்சையில் உள்ளனர்.