கரூர்: கரூர் மாவட்டத்தில் வரும், 12ல், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது என, மாவட்ட தலைமை நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம், கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வரும், 12ல் நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, வங்கி கடன் வழக்கு மற்றும் (விவாகரத்து தவிர) இதர குடும்ப நல வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஏற்படும், சட்டப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. எனவே, வக்கீல்கள், பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொண்டு வந்து, தீர்வு காணலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.