கரூர்: கரூர் மாவட்டம், கருப்பம்பாளையம் பஞ்சாயத்து, அப்பிபாளையம் சாலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் முன், நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். பஸ்சுக்காக, வெயில், மழை காலங்களில் ஒதுங்க இடம் இன்றி, அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் முன், பயணிகள் நிழற் கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.