கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக, 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 10 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி, நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 613 ஆக உயர்ந்தது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 77 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 395 ஆக உயர்ந்தது. தற்போது, 1001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.