ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரத்தை இணைக்கும் கேந்திரமாக விளங்கும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேலான வாகனத்தில் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் செல்கின்றனர்.நேற்று சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலம் வழியாக வரும் போது, பாலத்தின் நடுவில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி பாம்பன் ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவை கண்டு ரசிக்கின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு பஸ், சரக்கு, மீன் லாரிகள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் காத்து கிடப்பதால் பயணிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.