திருவெண்ணெய்நல்லுார் : பெரியசெவலை, சீனிவாசப் பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் உள்ள சீனிவாச சின்ன பெருமாள் கோவிலில் நேற்று காணும் பொங்கலையோட்டி திருவிழா நடைபெற்றது.விழாவில் பக்தர்கள் பணமாலை, வடைமாலை மற்றும் நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, திணை, சாமை, இளநீர், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை சூறை விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் புலி, சிங்கம், போலீஸ், திருடன் உள்ளிட்ட வேடமணிந்து ஆடினர்.விழாவில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.