ராமநாதபுரம்:மாந்திரீகம் செய்த வாலிபர், பொதுமக்கள் எதிர்ப்பால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே, வாலிநோக்கத்தைச் சேர்ந்த, முகம்மது அலி ஜின்னா. இவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக வேலுாரை சேர்ந்த ஷேக் இப்ராகீம், 35, என்பவர் தங்கியிருந்து குறி சொல்லுதல், மாந்திரீக வேலைகள் செய்து வந்துள்ளார். சுற்று வட்டார கிராம மக்கள் பலர், இவரிடம் நள்ளிரவு பூஜைகளுக்கு வந்து சென்றுள்ளனர்.
இவர்களது நடமாட்டம், வினோத வழிபாட்டு சடங்குகளைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத், த.மு.மு.க., உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். அவர் தங்கியிருந்த வீட்டின் உள்ளே சென்ற போது, 13 வயது சிறுமியின் கைகளில், ரத்தக்காயம் ஏற்படுத்த முயன்றார். அவரிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டார்.கிராம மக்களின் கோரிக்கையை அடுத்து, ஷேக் இப்ராகீமை வாலிநோக்கம் இன்ஸ்பெக்டர் ராதா எச்சரித்து ஊரைவிட்டு வெளியேற்றினார்.