ஈரோடு:''தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. டாக்டர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'' என ஐ.எம்.ஏ. நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா கூறியதாவது: ''ஈரோடு அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். பெரிய வலி சிரமம் இல்லை. தடுப்பூசி பணியை தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அப்போது தான் அதிக மக்களை சென்றடையும்.மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகம் வதந்தி குழப்பம் ஏற்படுகிறது.
இதை கட்டுப்படுத்த மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்ச உணர்வு நீங்கி மக்கள் தாங்களாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும்'' என்றார்.